Published : 07 Jun 2023 10:22 AM
Last Updated : 07 Jun 2023 10:22 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 101 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (புதன்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 216 புள்ளிகள் உயர்வடைந்து 63,009 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 72 புள்ளிகள் உயர்ந்து 18,671 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:58 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 101.20 புள்ளிகள் உயர்வடைந்து 62,894.08 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 48.85 புள்ளிகள் உயர்ந்து 18,647.85 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய கலவையான சூழல், அமெரிக்க பங்குச்சந்தைகளின் உயர்வு போன்ற காரணங்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகளும் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை நெஸ்ட்லே இந்தியா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், விப்ரோ, அல்ட்ரா டெக் சிமெண்ட், டிசிஎஸ், என்டிபிசி, பாரதி ஏர்டெல், ஐடிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், டெக் மகேந்திரா, மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் உயர்வில் இருந்தன. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம், கோடாக் மகேந்திரா பேங்க், டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x