Published : 23 Mar 2021 05:39 PM
Last Updated : 23 Mar 2021 05:39 PM

பாஜக தனித்துப் போட்டியிட்டால் ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் பதவி கூட கிடைக்காது: திருமாவளவன்

திருப்போரூர்

அதிமுக, பாமக என்ற கட்சிகளே இருக்காது. அக்கட்சிகளை பாஜகவே அழித்துவிடும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறும்போது, “இந்த சட்டப்பேரவைத் தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டு எப்படியாவது தமிழகத்தில் காலூன்றிவிட வேண்டும் என்று ஒரு கூட்டம் துடியாய்த் துடிக்கிறது.

தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டால் ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் பதவி கூட கிடைக்காது. இன்னும் சிறிது காலத்தில் அதிமுக, பாமக என்ற கட்சிகளே இருக்காது. அக்கட்சிகளை பாஜகவே அழித்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x