Published : 29 Nov 2020 06:32 PM
Last Updated : 29 Nov 2020 06:32 PM

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை)

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

பூரட்டாதி -

நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.

இதுவரை சந்தித்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சகோதர ஒற்றுமை பலப்படும். உறவினர்களால் ஆதாயமும் கிடைக்கப்பெறுவீர்கள்.

வழக்கு தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் சுமுகமாக தீர்வதற்கு வழி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.

அலுவலகப் பணியில் இயல்பான நிலை தொடரும். ஒரு சிலருக்கு வேறு வேலை மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி முன்னேற்றப் பாதைக்கு திரும்பும். வியாபாரத்தில் அதிகப்படியான லாபம் கிடைக்கும்.
பெண்களுக்கு குடும்பப் பிரச்சினைகள் தீரும். தேவையான பண உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் ஒரு சில தடைகள் ஏற்பட்டு விலகும். கலைஞர்களுக்கு எதிர்பாராத வகையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
பொறுமையைக் கையாண்டு காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும். கோபத்தை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். எந்த ஒரு காரியத்திலும் அவசரமாக முடிவெடுக்க வேண்டாம்.

செவ்வாய் -
எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய நபர்களால் வியாபார ஆதாயம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். அலுவலகப் பணிகளில் மனநிறைவு ஏற்படும். பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இன்று பேசி தீர்ப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.

புதன் -
சிக்கனமாக இருப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களுக்கு உதவி செய்ய வேண்டியது வரும். வியாபாரத்தில் மந்தமான நிலை இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் தாமதமாகும்.

வியாழன் -
உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அலுவலகத்தில் தேங்கி நின்ற அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கும்.

வெள்ளி -
அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடக் கூடாது. நிதானமான செயல்பாடு மிக அவசியம். அநாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றை இயக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

சனி -
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். வெளியூரிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொடுத்து குடும்பத்தினரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவீர்கள்.

ஞாயிறு -
நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் வழிபாடு செய்வதும், பெருமாளுக்கு துளசிமாலை சார்த்தி தரிசிப்பதும், நன்மைகளை அதிகப்படுத்தித் தரும்.
***************************

உத்திரட்டாதி -

தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகக் கூடிய வாரம். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

தெரியாத வேலையாக இருந்தாலும் முயற்சி செய்தால் அதிலும் வெற்றியைக் காணக்கூடியதாக இருக்கும். புதிதாக தொழில் தொடங்குவது வியாபாரம் தொடங்குவது போன்றவை சிறப்பான பலனைத்தரும். அதற்கான முயற்சிகளில் இருந்த வாரம் ஈடுபட அனைத்தும் சாதகமாக இருக்கும்.

அலுவலகப் பணிகளில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

பயணம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும், உணவகத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். நிலத் தரகர் மற்றும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் திருப்திகரமாகவே இருக்கிறது.

சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும்.

பெண்களுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும் வாரம். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

சுயதொழில் தொடங்கும் முயற்சி முன்னேற்றத்தைத் தரும். தேவையான உதவிகள் தேடிவரும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். விரும்பிய கல்வி வாய்ப்பு கிடைக்கும். உயர்கல்விக்கான வங்கிக் கடன் கிடைக்கும்.

கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை தவற விடக்கூடாது. எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு யோகத்தை தரக்கூடியதாக இருக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
பணவரவு சரளமாக இருக்கும். பணம் பல வழிகளிலும் கிடைக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் முழுமையான வெற்றி கிடைக்கும். சிறப்பான பலன்களும், நன்மைகளும் நடைபெறக்கூடிய நாளாக இருக்கும்.

செவ்வாய் -
அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். சிக்கனமாக செலவழிக்க வேண்டும். வீண் ஆடம்பரச் செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

புதன் -
அதிகப்படியான ஆதாயங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஆதாயம் தரக்கூடிய வாய்ப்புகளைத் தருவார்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

வியாழன் -
இயல்பான நாளாக இருக்கும். அலுவலகப் பணிகளில் கூடுதல் பணிச்சுமை போன்ற நிலை தொடரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி -
சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபம் கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்திற்கு அத்தியாவசியமான ஒரு பொருளை வாங்க வேண்டியது வரும்.

சனி -
எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு விஷயத்திலும் உடனடியாக முடிவெடுக்க வேண்டாம். குடும்பத்தினர் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

ஞாயிறு -
தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழ்நிலை உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு செய்வதும், பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்வதும் மிகச் சிறந்த பலன்களைத் தரும்.
*************************

ரேவதி -

எல்லாச் செயல்களிலும் சாதித்துக் காட்டக் கூடிய வாரம்.

அயராமல் உழைத்தால் உயரத்தைத் தொடலாம். எந்த முயற்சியிலும் முழு வெற்றியை அடைவீர்கள். பொருளாதாரப் பிரச்சினை என்பதே இனி இருக்காது.
வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய விஷயங்கள் நடக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். சுய தொழில் அல்லது வியாபாரம் தொடங்குவது போன்றவை சிறப்பாக இருக்கும்.

அலுவலகப் பணிகளில் உயர்ந்த அந்தஸ்தை அடைவீர்கள். உங்களுக்கான மதிப்பு மரியாதை கூடும். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். தொழில் ஒப்பந்தங்கள் தேடி வரும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் புதிய கிளைகள் தொடங்குவது, வியாபாரத்தை விரிவுபடுத்துவது போன்றவை நடக்கும்.

ஊழியர்கள் உண்மையாக இருப்பார்கள். தேவையான உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். குழந்தை பாக்கியம் தாமதமானவர்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும்.
மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள் விரும்பிய கல்வி கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இனி தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட வேலைகளில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி காண்பீர்கள். மனநிறைவு ஏற்படக் கூடிய வகையில் பணவரவு இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

செவ்வாய் -
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி காணக்கூடிய நாள். எனவே எடுத்துக்கொண்ட எந்த முயற்சிகளிலும் முழுமையான வெற்றியைக் காண்பீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

புதன் -
நிதானமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும்.

வியாழன் -
மன நிறைவைத் தரக் கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு உதவிகள் கிடைக்கும். உறவினர்களிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் அனைத்தும் நீங்கும்.

வெள்ளி -
அலுவலகப் பணிகளை சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை இருக்கும். செலவுகள் சற்று அதிகமாக ஏற்படக்கூடிய நாள்.

சனி -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பழைய கடனை அடைத்து புதிய கடன் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முழுமையாக தீரும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
குடும்பத்தினரோடு நேரத்தைச் செலவிட வேண்டும். நண்பர்களுடன் வெளியே செல்வது ஒரு சில பிரச்சினைகளில் சிக்கவைக்கும். நிதானமாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டிய நாள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமான் வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்வது நல்ல பலன்களைத் தரும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x