ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலிலிருந்து கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு இல்லாத 500 பயணிகள் விடுவிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் கண்டறியப்பட்டதால், சுமார் 500 பயணிகள் வரை நாளை விடுவிக்கப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாதவர்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் கப்பலில் உள்ள பயணிகளில் கோவிட்- 19 எனும் கரோனா வைரஸால் 500க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ஹாங்காங் நகரத்தில் இருந்து கடந்த வாரம் டைமண்ட் பிரின்சஸ் கப்பல் ஜப்பான் வந்தது. இந்தப் பயணிகள் கப்பலில் மொத்தம் 3,711 பயணிகள் இருந்தனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தக் கப்பலில் 6 இந்தியப் பயணிகள், 132 பணியாளர்கள் என மொத்தம் 138 இந்தியர்கள் உள்ளனர்.
இந்தக் கப்பல் ஹாங்காங்கில் இருந்து வந்ததால், கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருக்கும் எனும் அச்சத்தால், 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து கப்பலில் உள்ள பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தவறவீடாதீர்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 mins ago
இந்தியா
37 mins ago
தமிழகம்
33 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
59 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago