ரஷ்யாவின் செச்சென் பகுதியில் துப்பாக்கிச் சூடு: தீவிரவாதிகள் 6 பேர் பலி

By ஏபி

ரஷ்யாவில் செச்சென் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 6 பேரும் பலியாகினர்.

இதுகுறித்து தேசிய தீவிரவாத தடுப்பு மையம் இன்று (வெள்ளிக்கிழமை) அளித்த அறிக்கையில், "ரஷ்யாவின் செச்சென் பகுதியில் இன்று அதிகாலை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தச் சண்டையில் தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினரிலும் 6 பேர் கொல்லப்பட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் பிரிவினை தீவிரவாதிகளுக்கு எதிராக புதின் அரசு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

கருத்துப் பேழை

15 mins ago

கருத்துப் பேழை

21 mins ago

கருத்துப் பேழை

29 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

46 mins ago

உலகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்