Published : 07 May 2024 08:59 AM
Last Updated : 07 May 2024 08:59 AM

டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்

புதுடெல்லி: அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் வந்துள்ளதால் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியானது, வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் கலந்துகொண்டு விளையாட உள்ளன.

இதில் ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் டி20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்து இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று தெரிவித்து உள்ளது. போட்டியை நடத்தக்கூடாது என்று வடக்கு பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான டிரினிடாட் பிரதமரும் வெளிப்படுத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து போட்டி நடைபெறும் நகரங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

போட்டி நடைபெறும் மைதானங்கள், வீரர்கள் தங்கும் இடங்கள், பயிற்சி மைதானங்களில் கூடுதல் பாதுகாப்பு தரப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள் வெளியே செல்வதற்கும் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x