சிரியாவில் இஸ்லாமிக் ஸ்டேட் கிளர்ச்சிப் படை உள்பட பல்வேறு குழுக்களில் 12,000 வெளிநாட்டினர் உள்ளனர் என்று லண்டனைச் சேர்ந்த தீவிரவாதத் தடுப்பு நிபுணர் பீட்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
1980-ல் ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்தது. அப்போது ரஷ்யாவுக்கு எதிராக 20,000 வெளிநாட்டினர் போரிட்டனர். இப்போது சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் 74 நாடுகளைச் சேர்ந்த 12,000 வெளிநாட்டினர் பங்கேற்றுள்ளனர்.
இஸ்லாமிக் ஸ்டேட், அல்-காய்தா ஆதரவு கிளர்ச்சிப் படைகளில் சேர்ந்துள்ள அவர்கள் அந்த நாட்டு ராணுவத்துக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். வளைகுடா நாடுகளைத் தவித்து மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கிளர்ச்சிப் படையில் இணைந்துள்ளனர். பிரான்ஸில் இருந்து 700 பேர், பிரிட்டன்- 500 பேர், ஜெர்மனி- 400 பேர், பெல்ஜியம்- 300 பேர், அமெரிக்காவிலிருந்து 100 பேர் சிரியாவில் குடியேறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago