இன்று என்ன? - தொழிலாளர் தலைவர் வி.வி.

By செய்திப்பிரிவு

இந்தியாவின் நான்காவது குடியரசு தலைவர் வி. வி. கிரி 1894 ஆகஸ்ட் 10-ம் தேதி அன்றைய மதராஸ் மாகாணத்தில் கஞ்சம் மாவட்டத்தில் பிறந்தார்.

பெர்ஹாம்பூரில் உள்ள கல்லிகோட் கல்லூரியில் படித்தார், பின்னர் சட்டம் படிக்க 1913-ல் டப்ளின் சென்றார். இந்தியா திரும்பியதும், புதிய தொழிலாளர் இயக்கத்தில் சேர்ந்தார். அவர் பொதுச் செயலாளராகவும் பின்னர் அகில இந்திய ரயில்வே மேன்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் இருமுறை இருந்தார்.

1936-ம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் பொது தேர்தலில் வெற்றி பெற்றார். 1942-ல் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்திற்கு ஆதரவு அளித்தார். உத்தரபிரதேசம், கேரளா மற்றும் மைசூர் மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றினார். 1967-ம்ஆண்டு இந்தியாவின் துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1969-74 வரை குடியரசுத்தலைவராக இருந்தார். இவர் "தொழில் நிறுவனங்களின் உறவுகள்", "இந்திய தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர் பிரச்சினைகள்" உள்ளிட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா 1975-ம் ஆண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

35 mins ago

சினிமா

40 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

50 mins ago

விளையாட்டு

46 mins ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்