இந்தியாவின் நான்காவது குடியரசு தலைவர் வி. வி. கிரி 1894 ஆகஸ்ட் 10-ம் தேதி அன்றைய மதராஸ் மாகாணத்தில் கஞ்சம் மாவட்டத்தில் பிறந்தார்.
பெர்ஹாம்பூரில் உள்ள கல்லிகோட் கல்லூரியில் படித்தார், பின்னர் சட்டம் படிக்க 1913-ல் டப்ளின் சென்றார். இந்தியா திரும்பியதும், புதிய தொழிலாளர் இயக்கத்தில் சேர்ந்தார். அவர் பொதுச் செயலாளராகவும் பின்னர் அகில இந்திய ரயில்வே மேன்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் இருமுறை இருந்தார்.
1936-ம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் பொது தேர்தலில் வெற்றி பெற்றார். 1942-ல் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்திற்கு ஆதரவு அளித்தார். உத்தரபிரதேசம், கேரளா மற்றும் மைசூர் மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றினார். 1967-ம்ஆண்டு இந்தியாவின் துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1969-74 வரை குடியரசுத்தலைவராக இருந்தார். இவர் "தொழில் நிறுவனங்களின் உறவுகள்", "இந்திய தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர் பிரச்சினைகள்" உள்ளிட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா 1975-ம் ஆண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
6 mins ago
தமிழகம்
24 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
35 mins ago
சினிமா
40 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
50 mins ago
விளையாட்டு
46 mins ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago