மாநில தேர்தல் ஆணையம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப் பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் 28 மாவட்டங் களில் காலியாக உள்ள ஊரகஉள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 13-ம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள்,பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து புகார்கள் இருந்தால், அதைப் பெறுவதற்காக மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத் தளத்தில் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் அலுவல் மற்றும் விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயங்கும்.
எனவே, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான புகார்களை 18004257072, 180042 57073, 18004257074 ஆகிய இலவசதொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago