அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதாக ரூ.6 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கணவன், மனைவியை அந்தமானில் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அசோக்நகர் 18-வது அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (63). இவர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஒரு புகார் மனு கொடுத்தார்.
புகாரில், ‘‘ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள ‘பைவ் வென்ச்சூர்’ என்ற நிறுவனத்தின் இயக்குநர்கள் ஷகீலா, நஜீமா பானு மற்றும் ஷகீ லாவின் கணவர் கலீல் மற்றும் நஜீமா பானுவின் கணவர் ஷாஜ ஹான் ஆகியோர் அடுக்குமாடி குடி யிருப்பு கட்டித்தருவதாகக் கூறி ரூ.6 கோடி பணம் பெற்றுக் கொண்டு, வீடு கட்டித் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும், மோசடி செய்துவிட்டனர்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், சந்தானகிருஷ் ணன் கொடுத்த புகாரில் குறிப்பிட்டிருந்த 4 பேரும், ரூ.6 கோடி பெற்றுக்கொண்டு, வீடு கட்டித்தராமல் மோசடி செய்து, தலைமைறைவாகிவிட்டது தெரியவந்தது. இதில், கலீல் (62) அவரது மனைவி ஷகீலா (56) ஆகியோரை கடந்த 28.4.2016 அன்று கைது செய்யப்பட்டனர்.
ஷாஜஹான், அவரது மனைவி நஜீமா பானு ஆகியோர் தலை மறைவாகிவிட்டனர். அவர்கள் அந்தமான் தீவில் பதுங்கியி ருப்பதாக, தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படையினர் அந்தமான் நிக்கோபார் தீவுக்கு சென்று அங்கு மாயாபந்தர் என்ற இடத்தில் தலைமறைவாக இருந்து வந்த ஷாஜஹான் (43), அவரது மனைவி நஜிமா பானு (38) ஆகியோரை கடந்த 19.11.2016 அன்று கைது செய் தனர். விசாரணையில், கைது செய் யப்பட்ட ஷாஜஹான், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஷகீலாவின் சகோதரர் என்பதும், இவர் நெய் வேலி நிலக்கரி சுரங்கத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
தமிழகம்
23 mins ago
வலைஞர் பக்கம்
26 mins ago
தமிழகம்
39 mins ago
சினிமா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago