டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.274 கோடி மது விற்பனை

By செய்திப்பிரிவு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.274 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன.சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. பலரும் 2 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

இதனால், நேற்று முன்தினம் ஒரே நாளில் மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.58.26 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.

மண்டல வாரியாக சென்னையில் ரூ.55.77 கோடி, திருச்சியில் ரூ.53.48 கோடி, சேலத்தில் ரூ.54.12 கோடி, கோவையில் ரூ.52.29 கோடி என மொத்தம் ரூ.273.92 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

தமிழகம்

19 mins ago

வலைஞர் பக்கம்

22 mins ago

தமிழகம்

35 mins ago

சினிமா

58 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்