பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் 35 ஆயிரத்து 583 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த திலீபன் (29) இவர் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் சுற்றுலாத்துறையில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராகப் பயின்று வருகின்றார்.
இவரது நண்பர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆடம்சன் ராஜ் (26) இவர்கள் இருவரும் சுற்றுலா விழிப்புணர்வு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி புதுச்சேரியிலிருந்து இருந்து புறப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள முக்கிய இடங்களுக்கு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி பயணம் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை பேருந்து மூலம் ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் தங்களின் பயணத்தை நிறைவு செய்தனர்.
பொதுப் போக்குவரத்து மூலம் நாடு முழுவதும், 23 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களை, 43 ரயில்கள், 34 பேருந்துகள், 8 விமானங்களில் 35 ஆயிரத்து 583 கிலோ மீட்டர் தூரத்தை பொதுப்போக்குவரத்து பயன்படுத்தி கடந்துள்ளனர்.
தங்களின் பயண நிறைவு திலீபன் மற்றும் ஆடம்சன் ராஜ் ஆகியோர் ராமேசுவரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியர் 29 ஆயிரத்து 119 கிலோ மீட்டர் தூரத்தை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி கடந்ததே உலக கின்னஸ் சாதனையாக இருந்தது.
தற்போது அந்த சாதனையை 35 ஆயிரத்து 583 கிலோ மீட்டர் தூரத்தை பொது போக்குவரத்து மூலம் பயணித்து கடந்து சாதனை படைத்துள்ளோம்.
பிப்ரவரி 7 அன்று தொடங்கிய பயணம் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் ஜுலை 16 ஆம் தேதி தொடங்கி ராமேசுவரத்தில் நிறைவு செய்துள்ளோம்.
இந்தப் பயணித்தில் டெல்லி, ஆக்ரா, அமிர்தசரஸ், சிம்லா, வாரணாசி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஆக்ரா, ஜெய்சால்மர், புனே, ஷிர்டி, மதுரை, புவனேஸ்வர், திருவனந்தபுரம், நெல்லூர், ஆகிய முக்கிய இடங்களை இந்த பயணத்தில் பார்வையிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
52 mins ago
உலகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago