பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்ற உறவினரை கொலை செய்துவிட்டு, இளம்பெண் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள அல்லிமேடு பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண், நேற்று முன்தினம் மாலை அல்லிமேடு பகுதியில் உள்ள குதிரை பண்ணை அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார். அப்போது, அந்த பெண்ணின் உறவினரான அஜித் என்ற கிளி அஜித்(25) மதுபோதையில், பின்தொடர்ந்து சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த பெண், அஜித்தை பலமாக தள்ளியதில், பின்னால் இருந்த பனை மரத்தில் மோதி கீழே விழுந்தார். தொடர்ந்து, தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில், அஜித்திடம் இருந்து பறித்த கத்தியால் அவரது கழுத்தில் பலமாக வெட்டியுள்ளார். இதில், அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அந்த பெண் சோழவரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
கல்வி
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago