கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தக் கோரி மதுரையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை மிகக் குறைவாகவே செய்யப்படுவதாக சு.வெங்க டேசன் எம்.பி. ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சு.வெங்கடேசன் எம்பி., எம்.எல்.ஏ.க்கள் பி.மூர்த்தி, பா.சரவணன் உட்பட பலர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

முன்னதாக எம்.பி. உள்ளிட்டோர் கூறியதாவது:

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரை மாவட்டத்துக்கு 20,000-க்கும் அதிகமானோர் வந்துள்ளனர். இவர் களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படவில்லை.

மேலும் மதுரை மக்களுக்கும் பெயரளவில் மட்டுமே பரிசோத னை நடக்கிறது. இதனால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் வாய்ப் புள்ளது.

இதைத் தவிர்க்க தினமும் 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்த வேண்டும். கரோனா ஒழிப்புப் பணியில் மேலும் வேகம் காட்ட வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

உலகம்

47 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்