ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 கர்ப்பிணிகளுக்கு கரோனா 

By கி.தனபாலன்

ராமநாதபுரத்தில் 2 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 65 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதியுள்ளவர்கள் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பரமக்குடி தாலுகா அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் நகராட்சி நீலகண்ட ஊரணி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணி, கீழக்கரையைச் சேர்ந்த 30 வயது கர்ப்பிணிக்கு ஆகிய 2 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனையடுத்து அவர்கள் வசிக்கும் பகுதிகளில் நகர சுகாதாரப் பிரிவினர், சுகாதார மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவக் குழுவினரும் அப்பகுதி வீடுகளில் உள்ளவர்களுக்கு கரோனா அறிகுறி ஏதும் உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 mins ago

சினிமா

30 mins ago

தமிழகம்

37 mins ago

வலைஞர் பக்கம்

40 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்