அத்திவரதர் தரிசனம்: துணை ராணுவப் படைக்கு அவசியமில்லை; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

அத்திவரதர் தரிசனத்திற்காக பாதுகாப்புக்கு துணை ராணுவம் வரவழைக்க வேண்டிய அவசியமில்லை என, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் அத்திவரதரை, ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன், தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) தரிசனம் செய்தனர். வரதராஜ பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வைபவத்தின் 26-வது நாளில்  அத்திவரதர் இளஞ்சிவப்பு  நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வருகை தந்து அத்திவரதரை தரிசித்தார். திருப்பதி தேவஸ்தான இயக்குநர் அனில்குமார், வஸ்திரங்கள், குடைகள், சந்தனம் ஆகியவற்றை அளித்து, அத்திவரதரை தரிசனம் செய்தார். 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அத்திவரதரை தரிசித்தார். தரிசனத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, "அதிகபட்சம் அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேரத்தில் அத்திவரதரை தரிசித்துவிடலாம். மனிதநேயத்துடன் காவல்துறை நடந்துகொள்கிறது. இங்கு வேலை செய்யும் தேவஸ்தான பணியாளர்களும் மனிதநேயத்துடன் நடந்துகொள்கின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்கு இணங்க, தேவஸ்தானமும் காவல்துறையும் மற்ற அதிகாரிகளும் சிறப்பாக செயல்படுகின்றனர். அதனால், எந்தவித பிரச்சினைகளும் இல்லை. துணை ராணுவ வரவழைக்கும் அளவுக்கு தமிழகத்தின் நிலைமை இல்லை. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லா விதமான உதவிகளையும் தமிழக அரசு செய்திருக்கிறது", எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

27 mins ago

சினிமா

48 mins ago

தமிழகம்

55 mins ago

வலைஞர் பக்கம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்