‘தூய்மை இந்தியா’ திட்டத்தை கமல்ஹாசன் நவ.7-ல் தொடங்குகிறார்

By செய்திப்பிரிவு

‘தூய்மை இந்தியா’ இயக்கத்தின் ஒரு பகுதியாக கமல்ஹாசன் தலைமையில் நீர் நிலைகளை தூய்மை படுத்தும் திட்டம் அவரது பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது.

தாம்பரம்- வேளச்சேரி முதன்மைச் சாலையில் உள்ள மாதம்பாக்கம் ஏரியிலிருந்து இத்திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதன் தொடக்கவிழாவில் கமல்ஹாசனின் திரையுலக நண்பர்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

அன்று மாலை 3 மணியளவில் சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தின் எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், நற்பணி இயக்கத்தின் நலத்திட்டங்கள் குறித்தும் பகிர்ந்துகொள்ள கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

57 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்