நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மீது ரூ. 2.18 கோடியை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீ்ன் கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆதிநாராயணன் சுப்பிரமணி யன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு புகார் கொடுத்தார். அதில், முன்னாள் எம்பியும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் என்ற சிவக்குமாரும், அவரது ஆட்களும் தன்னிடம் ரூ.2.18 கோடி யைப் பெற்று மோசடி செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந் தார்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி நடிகர் ஜே.கே.ரித்தீஷ், அவரது மனைவி ஜோதீஸ்வரி, நாகநாதசேதுபதி, பஷீர், சுரேஷ் கண்ணன், முரளிதரன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மோசடி உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் தன்னை எந்நேரமும் போலீஸார் கைது செய்யலாம் என்பதால் நடிகர் ரித்தீஷ், நாகநாத சேதுபதி ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஏப்ரல் 10-ல் விசாரணை
இந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஷீமாபானு, இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசார ணையை வரும் ஏப்ரல் 10-க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். அதேபோல, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி மற்றும் சுரேஷ் கண்ணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
உலகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago