நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது முடிவடைந்த நிலையில் ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்துவது இன்றுடன் முடிவடைகிறது.
நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது, கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது நேற்று மாலை 5.30 மணியுடன் முடிவடைந்தது.
ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்துவது இன்று பகல் 11.30 மணியுடன் முடிவடைகிறது. நாடுமுழுவதும் மாநிலப் பாடத்திட்டங்கள், சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களும் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க, நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
16 mins ago
சுற்றுலா
28 mins ago
தமிழகம்
30 mins ago
சினிமா
35 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago