Published : 13 Mar 2018 09:32 AM
Last Updated : 13 Mar 2018 09:32 AM
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது முடிவடைந்த நிலையில் ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்துவது இன்றுடன் முடிவடைகிறது.
நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது, கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது நேற்று மாலை 5.30 மணியுடன் முடிவடைந்தது.
ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்துவது இன்று பகல் 11.30 மணியுடன் முடிவடைகிறது. நாடுமுழுவதும் மாநிலப் பாடத்திட்டங்கள், சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களும் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க, நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT