தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: 9% லிருந்து 12% ஆக உயர்த்தி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழக அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான அகவிலைப்படியை 9 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழக அரசு நிதித்துறை வெளியிட்ட அரசாணையில், ''முழு நேரமாகப் பணிபுரிந்து அகவிலைப்படியைப் பெற்று வரும் தமிழக அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் ஊழியர்கள்  உள்ளிட்டோருக்கும் இது பொருந்தும்.

இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகவிலைப்படி 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதம் ஏற்றி முன் தேதியிட்டு பலன் கிடைக்கும் வகையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்