ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக நடிகர் கமல்ஹாசன் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து, சில தினங்களுக்கு முன்னர் கருத்தை தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில், தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா ஆருத்ரா என்பவர் நடிகர் கமல்ஹாசன் மீது புகார் அளித்துள்ளார்.
அதில், “வார இதழ் ஒன்றில், என்னுள் மையம் கொண்ட புயல் என்ற தலைப்பில் கமல் எழுதும் அத்தியாயத்தில், ஓட்டுக்கு பணம் வாங்குவது, பிச்சை எடுப்பது போன்றாகும் என விமர்சனம் செய்துள்ளார். நானும், ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்தவர் என்ற முறையில், வாக்காளர்களை கேவலப் படுத்திய கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இதேபோல், மேலும் சிலரும் நடிகர் கமலஹாசன் மீது புகார் தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
17 mins ago
விளையாட்டு
34 mins ago
இந்தியா
57 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago