ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு ராஜ்காட்டில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி முரளி விஜய் தலைமையில் களமிறங்குகிறது.
ரெய்னா தலைமையிலான குஜராத் அணி 7 ஆட்டத்தில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று பட்டியலில் கடைசி இடம் வகிக்கிறது. இரு அணிகளும் இந்த சீசனில் இரண்டாவது முறையாக மோதுகின்றன. ஏப்ரல் 11-ல் நடைபெற்ற ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றிருந்தது.
இன்றைய ஆட்டத்தில் இருந்து பஞ்சாப் அணி முரளி விஜய் தலைமையில் களமிறங்க உள்ளது. டேவிட் மில்லர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக முரளி விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். மில்லர் இந்த தொடரில் 76 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
1 hour ago
கல்வி
3 hours ago
இந்தியா
2 hours ago
ஓடிடி களம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago