வெற்றி தேடிக் கொடுப்பாரா புதிய கேப்டன் முரளி விஜய்

By செய்திப்பிரிவு

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு ராஜ்காட்டில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி முரளி விஜய் தலைமையில் களமிறங்குகிறது.

ரெய்னா தலைமையிலான குஜராத் அணி 7 ஆட்டத்தில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று பட்டியலில் கடைசி இடம் வகிக்கிறது. இரு அணிகளும் இந்த சீசனில் இரண்டாவது முறையாக மோதுகின்றன. ஏப்ரல் 11-ல் நடைபெற்ற ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றிருந்தது.

இன்றைய ஆட்டத்தில் இருந்து பஞ்சாப் அணி முரளி விஜய் தலைமையில் களமிறங்க உள்ளது. டேவிட் மில்லர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக முரளி விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். மில்லர் இந்த தொடரில் 76 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

1 hour ago

கல்வி

3 hours ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்