ஓபிஎஸ், ஈபிஎஸ் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தினால் உண்மை வெளிவரும்: விஜயகாந்த்

By செய்திப்பிரிவு

ஓபிஎஸ், ஈபிஎஸ் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தினால் உண்மை வெளிவரும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதற்கு தேமுதிக சார்பில் இன்று (சனிக்கிழமை) சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த், ''போயஸ் இல்லத்தில் ஐடி சோதனை நடைபெற்றது சரி. ஆனால் அமைச்சர்கள் வீட்டிலும் ரெய்டு நடைபெற வேண்டும். குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற வேண்டும்.அப்போதுதான் உண்மை நிலவரம் வெளிவரும். மக்களும் உண்மையைப் புரிந்துகொள்வார்கள்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்