மே மாதத்தில் நடக்கவிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 47-வது கூட்டம் பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஜிஎஸ்டி சட்டத்தின்படி, மாநிலங்களுக்கான ஐந்தாண்டு கால இழப்பீடு அடுத்துவரும் ஜூன் மாதத்துடன் முடியவுள்ளது. பெருந்தொற்றின் காரணமான கடுமையான பொருளாதாரச் சவாலை எதிர்கொண்டுள்ள மாநில அரசுகள், இந்த இழப்பீட்டை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிவருகின்றன. நடக்கவிருக்கும் கவுன்சில் கூட்டத்திலேயே நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டால்தான், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தேவையான சட்டத்திருத்தங்களைச் செய்ய முடியும். ஜிஎஸ்டி இழப்பீட்டைத் தொடர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வலியுறுத்திவருகையில், ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தீர்வை நீக்கப்பட வேண்டும் என்ற விருப்பமும் தொழில் துறையில் நிலவுகிறது.
இதற்கிடையில், வரி விகித அடுக்குகளில் ஒருசிலவற்றை ஒன்றாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுவருகிறது. தற்போது 0%, 5%, 12%, 18%, 28% ஆகிய ஐந்து அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 12%, 18% ஆகிய இரண்டையும் ஒன்றாக்கி 15% என்ற புதிய அடுக்கை உருவாக்க ஆலோசிக்கப்பட்டுவருகிறது. வரி விகித அடுக்குகளில் மாற்றங்களைச் செய்வது மட்டுமின்றி, 143 பொருட்களுக்குத் தற்போது விதிக்கப்படும் வரியைக் காட்டிலும் கூடுதலாக வரி விதிக்கவும் ஏற்பாடாகிவருகிறது. இவற்றில் 92% பொருட்களுக்கு 18%-லிருந்து 28% வரி நிர்ணயம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 18% வரி விகித அடுக்கில் தற்போது 480 பொருட்கள் உள்ளன. ஜிஎஸ்டியின் மொத்த வருமானத்தில் ஏறக்குறைய 70% இந்தப் பொருட்களிலிருந்தே பெறப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
உலகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago