மனிதகுலத்தின் தோற்றம் குறித்து அறிவியலாளர்கள் எப்போதும் பெருவேட்கை கொண்டிருக்கிறார்கள். நவீன மனிதர்களான ஹோமோ சேப்பியன்ஸ் எங்கு, எப்போது தோன்றினர்? ஹோமோ என்ற பேரினத்தின் (Genus) மற்ற இனங்களிலிருந்து (Species) மேம்பட்டு முன்நிகழ்ந்திராத ஒன்றாகச் சமூகத்தையும் பண்பாட்டையும் நவீன மனிதர்கள் (சேப்பியன்ஸ்) கட்டமைத்தது எப்படி என்பன போன்ற கேள்விகளுக்கு அறிவியலாளர்களும் அறிஞர்களும் தத்துவவியலாளர்களும் பல நூறு ஆண்டுகளாக விடை தேடிவருகின்றனர். 19ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு ஓவியர் பால் கோகன், ‘Where Do We Come From? What Are We? Where Are We Going?’ என்ற ஓவியம்வழி கலையிலும் இக்கேள்வியை எழுப்பியிருக்கின்றார்.
இந்தப் பின்னணியில், சாத்தியமில்லாதது என்று கருத்தப்பட்ட, ‘அற்றுப்போய்விட்ட மனித இனங்களின் மரபணுத்தொகுதி சார்ந்தும் மனிதப் பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காகவும்’ ஸ்வீடனைச் சேர்ந்த மரபணுவியலாளர் ஸ்வாந்தே பேபுவுக்கு (Svante Pääbo) இந்த ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய பெரும் கேள்விகளுக்கான பதில்களை நாம் நெருங்கிவிட்டோம் என்பது இதன் மூலம் துலக்கமாகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago