புதுடெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று பஞ்சாபில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் கடந்த 16-ம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று சந்தித்துப் பேசினார். பஞ்சாபின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை பகவந்த் மான் சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. பகவந்த் மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசித்தனர். பஞ்சாபின் முன்னேற்றத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பகவந்த் மானிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
46 mins ago
உலகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago