தடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை: ராகுல்காந்தி விமர்சனம்

By செய்திப்பிரிவு

தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு கரோனாவின் இரண்டாம் அலையை சரியாகக் கையாளவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

புதிய நாடாளுமன்றம் கட்டுவது, பிரதமருக்கு வீடு கட்டுவது உள்ளிட்டவற்றை அடக்கிய மத்திய விஸ்டா திட்டத்தை கரோனா காலத்தில் செய்யக் கூடாது. அதற்குச் செலவிடும் தொகையை மக்களின் சுகாதாரத் திட்டங்களுக்குச் செலவிடலாம் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், மத்திய விஸ்டா திட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக மத்திய அரசை ராகுல்காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இதுகுறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ தடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை. தற்போது மீதம் இருப்பவை எல்லாம் மத்திய விஸ்டா திட்டம், பிரதமரின் புகைப்படங்கள், மருந்துகள் மீதான ஜிஎஸ்டி” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,120 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை ஒட்டு மொத்தமாக 2.3 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்