மத்திய ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தண்ணீர் பயன்பாட்டை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்ய உள்ள 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.
இதன் ஒரு பகுதியாக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத் தாத, காற்றழுத்தம் மூலம் சுத்தம் செய்யக்கூடிய கழிவறை கள் நிறுவுவது குறித்து ஆலோ சிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் தண்ணீர் பயன்பாட்டை 4-ல் ஒரு பங்காக குறைக்க முடியும். டெல்லி-சண்டீகர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை முயற்சியாக 80 கழிவறைகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கழிவுகள் விழுவதால் தண்ட வாளங்கள் துருப்பிடிப்பதையும் தடுக்க முடியும்.
அதேநேரம், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள பழைய கழிவறைகளுக்கு பதிலாக பயோ-டாய்லெட் பொருத்தும் திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
கல்வி
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago