பெங்களூர் தனியார் பள்ளி ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து பள்ளியின் நுழைவாயிலில் பெற்றோர்கள் குவிந்தனர்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
காலையில் பள்ளி சென்ற சிறுமி, மாலையில் வீடு திரும்பிய போது காய்ச்சலுடன் காணப்பட்டதாகவும், தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு உடல் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவரிடம் சென்ற பெற்றோர், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பெங்களூரு ஜலாஹல்லியில் உள்ள பள்ளியை முற்றுகையிட்டு ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பள்ளிக்கு சென்ற பெங்களூரு ஆணையர் எம்.என்.ரெட்டி, விசாரணைக்கு உத்தரவிட்டார்.
பள்ளியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பள்ளியில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago