விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் நாயகிகளாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தின் நாயகனாக சிவகார்த்திகேயன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிய லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
ஆனால், படத்தின் பொருட்செலவைக் கணக்கில் கொண்டு இந்தப் படம் கைவிடப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் முன்பே எழுதி வைத்திருந்த 'காத்துவாக்குல இரண்டு காதல்' கதையைக் கையில் எடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். இது தான் தனது அடுத்த படமாக இருக்கும் என்று முன்பே தனது ட்விட்டர் தகவலில் மாற்றியிருந்தார். அது தற்போது நிஜமாகியுள்ளது.
இந்தக் கதையில் விக்னேஷ் சிவன் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவருமே நாயகிகளாக நடிக்கவுள்ளனர். முழுக்க காதல் கலந்த காமெடி களத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவறவிடாதீர்
திரை விமர்சனம்: வானம் கொட்டட்டும்
4 நாட்கள் நடைபெற்ற சோதனை நிறைவு: விஜய் உட்பட 3 பேருக்கு சம்மன் அனுப்ப வருமானவரி துறை முடிவு
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
10 mins ago
சுற்றுச்சூழல்
20 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
30 mins ago
இந்தியா
15 mins ago
விளையாட்டு
36 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago