மும்பையின் 117 மாடி சொகுசு வீடுகள் லண்டனில் விற்பனை

By செய்திப்பிரிவு

மும்பையில் தற்போது கட்டப் பட்டுவரும் மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பை லண்டனில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புதான் உலகிலேயே மிக உயரமான குடியிருப்பாக இருக்கும். மொத்தம் 117 தளங்களை கொண்டதாக இது கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இது முழுவதுமாக தயாராகிவிடும்.

442 மீட்டர் உயரம் கொண்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் 300-க்கும் மேற்பட்ட சொகுசு குடியிருப்புகள் இடம்பறுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கடல் பகுதியை நோக்கி இருக்கும்படி கட்டப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நீச்சல் குளம், ஜிம்னாசியம், ஹெல்த் கிளப் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும்.

ஒவ்வொரு குடியிருப்பிலும் விசாலமான வரவேற்பறை, சமையலறை, சொகுசான படுக்கை அறை சூட்கள் மற்றும் நவீன குளியலறைகள் இடம்பெறும்.

ஒவ்வொரு குடியிருப்பின் ஆரம்ப விலை 14 லட்சம் பவுண்ட்களாகும் (சுமார் ரூ. 13.45 கோடி).

இங்கிலாந்திலிருந்து அடிக்கடி இந்தியா வந்துசெல்லும் தொழிலதிபர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களை இலக்காகக் கொண்டு லண்டனில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் இப்போது பொருளாதார தேக்க நிலை மாறியுள்ளதால் அங்கு இத்தகைய சொகுசு பங்களாக்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்