டெக்சாஸ் பனிப்பொழிவு: 21 பேர் பலி 

By செய்திப்பிரிவு

டெக்சாஸில் நிலவும் கடும் பனிப்பொழிவுக்கு இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்கத் தென்கிழக்கு மாகாணமான டெக்சாஸில் உறை பனி நிலவுகிறது. இதனால் அங்கு பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சார இழப்பைச் சந்தித்துள்ளனர். மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெக்சாஸில் இதுவரை கடும் பனிப்பொழிவால் 21 பேர் பலியானதாகவும், மேலும் பல இடங்களில் மின்சாரம் திரும்பாமல் உள்ளதால் தொடர்ந்து மக்கள் சிரமத்தில் உள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவசர உதவிகளை உடனடியாக வழங்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மாகாண ஆளுநர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

டெக்சாஸ் மட்டுமில்லாமல் ஹவுஸ்டனிலும் கடுமையான பனிப்பொழிவு நீடிப்பதால் அங்கு மின் பாதிப்பு நிலவுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

கருத்துப் பேழை

14 mins ago

கருத்துப் பேழை

20 mins ago

கருத்துப் பேழை

28 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

45 mins ago

உலகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்