டெக்சாஸில் நிலவும் கடும் பனிப்பொழிவுக்கு இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்கத் தென்கிழக்கு மாகாணமான டெக்சாஸில் உறை பனி நிலவுகிறது. இதனால் அங்கு பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சார இழப்பைச் சந்தித்துள்ளனர். மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெக்சாஸில் இதுவரை கடும் பனிப்பொழிவால் 21 பேர் பலியானதாகவும், மேலும் பல இடங்களில் மின்சாரம் திரும்பாமல் உள்ளதால் தொடர்ந்து மக்கள் சிரமத்தில் உள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவசர உதவிகளை உடனடியாக வழங்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மாகாண ஆளுநர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
டெக்சாஸ் மட்டுமில்லாமல் ஹவுஸ்டனிலும் கடுமையான பனிப்பொழிவு நீடிப்பதால் அங்கு மின் பாதிப்பு நிலவுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
கருத்துப் பேழை
14 mins ago
கருத்துப் பேழை
20 mins ago
கருத்துப் பேழை
28 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
45 mins ago
உலகம்
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago