Published on : 18 Oct 2020 18:57 pm

பேசும் படங்கள்... (18.10.2020)

Published on : 18 Oct 2020 18:57 pm

1 / 33

புரட்டாசி மாதம் நிறைவுபெற்று முதல் ஞாயிற்றுகிழமையான இன்று (18.10.2020) காலை கொட்டும் மழையிலும் கூட குடைகளைப் பிடித்துக்கொண்டு... கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க திரண்டிருந்த பொதுமக்கள். படம்: எம்.சாம்ராஜ்

2 / 33

மீன் பிடிக்க சென்ற கடலூர் மீனவருடைய வலையில் சிக்கிய பெரிய வகை வஞ்சரம் மீனை... காண்பிக்கும் மீன் வியாபாரி. படம்: எம்.சாம்ராஜ்

3 / 33

புதுச்சேரி - கிரும்மாம்பாக்கம் சிந்தாமணி நகரில் பெய்த மழை நீர்... கால்வாய்க்கு செல்ல முடியாமல் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதுகுறித்து இந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் கூறியும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி - கடலுார் சாலையில் இப்பகுதி பொதுமக்கள் இன்று (18.10.2020) சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு... வாகனங்கள் நீண்ட துாரத்துக்கு நின்றன. படங்கள்: எம்.சாம்ராஜ்

4 / 33
5 / 33
6 / 33

புதுச்சேரி - கிரும்மாம்பாக்கம் சிந்தாமணி நகரில் பெய்த மழை நீர்... கால்வாய்க்கு செல்ல முடியாமல் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்தது. அப்போது தங்கள் வீட்டுகளுக்குள் தேங்கியிருந்த மழை நீரை அவ்வீட்டுப் பெண்கள் அப்புறப்படுத்தினர். படங்கள்: எம்.சாம்ராஜ்

7 / 33
8 / 33

புதுச்சேரி - கிரும்மாம்பாக்கம் சிந்தாமணி நகரில் இன்று (18.10.2020) அதிகாலை பெய்த மழையில் அப்பகுதி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர். படம்: எம்.சாம்ராஜ்

9 / 33

ஜார்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டோன் சாமியை விடுதலை செய்யக் கோரி.... மதுரை - ஆரப்பாளையத்தில் உள்ள ஞான ஒளிபுரம் புனித ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெபஸ்டீன் தலைமையில் இன்று (18.10.2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

10 / 33

’கரோனா’ தொற்று அச்சம் காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களைத் தவிர்த்து... ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், சென்னை - எழும்பூர் டிக்கெட் முன்பதிவு மையத்தில் முன்பதிவு செய்ய வரும் பயணிகள் கூட்டம் இன்று (18.10.2020) குறைவாகவே இருந்தது. படங்கள்: பு.க.பிரவீன்

11 / 33
12 / 33

சென்னை நகர் முழுவதும் இன்று (18.10.2020) காலை முதல் பரவலாக பெய்த மழையால்... நேப்பியர் பாலம் அருகில் உள்ள சாலையில் ஆங்காங்கே நீர் தேங்கியுள்ளது. படங்கள் : பு.க.பிரவீன்

13 / 33
14 / 33
15 / 33
16 / 33
17 / 33
18 / 33
19 / 33
20 / 33

கிரிக்கெட் விளையாட்டின் மீதுள்ள அடக்க முடியாத ஆர்வத்தில்... பெய்யும் மழைத் தூறலையும் பாராமல்... இன்று (18.10.2020) சென்னை - லேடி வெல்லிங்டன் கல்லூரி மைதானத்தில் ஆர்வத்துடன் விளையாடிய இளைஞர்கள். படங்கள் : பு.க.பிரவீன்

21 / 33
22 / 33
23 / 33

புரட்டாசி மாதம் நிறைவுபெற்ற முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று (18.10.2020) சென்னை- காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் மழையில் நனையாமல் இருக்க... குடைகளைப் பிடித்தபடி மீன் வாங்கி செல்ல திரண்டிருந்தனர். படங்கள்: பு.க.பிரவீன்

24 / 33
25 / 33
26 / 33
27 / 33

புரட்டாசி மாதம் நிறைவுபெற்ற முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று (18.10.2020) சென்னை- நொச்சிக்குப்பம் மீன் சந்தையில் மீன் வாங்க திரண்டிருந்த பொதுமக்கள். படங்கள் : பு.க.பிரவீன்

28 / 33
29 / 33
30 / 33

சென்னை - புறநகர் பகுதி முழுவதும் இன்று (18.10.2020) அதிகாலையில் தொடங்கி மழை பெய்து கொண்டே இருந்தது. ’மழை பெய்தால் எங்களுக்கென்ன’ என்று எந்த ஈரக்கவலையுமின்றி... இன்று தாம்பரம் ரயில்வே மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள். படங்கள் : எம்.முத்து கணேஷ்

31 / 33
32 / 33
33 / 33

Recently Added

More From This Category

x