Published on : 19 Jun 2020 19:18 pm

பேசும் படங்கள்... (19.06.2020)

Published on : 19 Jun 2020 19:18 pm

1 / 77

வேலூரில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 300- க்கும் மேற்பட்டோரு க்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள்தனிமைப்படுத்தப்பட்டு... சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக, பொதுமக்கள் அதிகமாக கூடும், வேலூர் பழைய பேருந்து நிலையம், பேலஸ் கபே பகுதியிலிருந்து கிருபானந்த வாரியார் சாலை, லாங்கு பஜார், மெயின் பஜார் மற்றும் சுண்ணாம்புகாரத் தெரு செல்லும் சாலையில் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. படம் : வி.எம்.மணிநாதன்.

2 / 77
3 / 77

வேலூர் - சேண்பாக்கம் பகுதியில் 20 பேருக்கும் மேல் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதைத் தொடர்ந்து... அவர்கள் வசிக்கும் ஈஸ்வரன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெருவில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி இன்று (19.6.2020) தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்

4 / 77
5 / 77

இன்று (19.6.2020) முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துப்பட்டுள்ளதைத் தொடர்ந்து... சென்னை - அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடு) அமைந்துள்ள ஜெமினி மேம்பாலம் (அண்ணா மேம்பாலம்) பகுதி... வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. படம்: எல்.சீனிவாசன்

6 / 77
7 / 77

இன்று (19.6.2020) முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துப்பட்டுள்ளதைத் தொடர்ந்து... வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படும் சென்னை - அண்ணா சாலை (மவுண்ட் ரோடு) இன்று முதல் 12 நாட்களுக்கு தொடர்ந்து இதே நிலைதான். படங்கள்: எல்.சீனிவாசன்

8 / 77
9 / 77
10 / 77

இப்போதும் மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக - ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால்... மதுரை - அழகர் கோவிலுக்குள் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே - இன்று (19.6.2020) காலையில் கோயிலின் கோட்டைச்சுவர் வாசல் முன்பு... பக்தர்கள் முருகப்பெருமானுக்குரிய நேர்த்திக்கடனை.. முடி காணிக்கையாக செலுத்திவிட்டு சென்றனர். படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

11 / 77
12 / 77
13 / 77

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் இப்போதும் மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு அமலில்தான் உள்ளது. இந்நிலையில் - வியாபாரம் இன்றி காணப்படும் மதுரை - சர்வேயர் காலனி தற்காலிக காய்கறி மார்க்கெட். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

14 / 77

இன்று (19.6.2020) முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துப்பட்டுள்ளதைத் தொடர்ந்து... வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படும் சென்னை - கிண்டி பகுதியில் உள்ள கத்திபாரா மேம்பாலம். படங்கள்: எல்.சீனிவாசன்

15 / 77
16 / 77

கரோனா தொற்று பரவல் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் - கல்வி கட்டணத்தை உடனடியாக கட்ட வேண்டும் என... சில தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்றோரை வற்புறுத்துவதை கண்டித்து - மதுரை மாவட்ட கல்வி அலுவலம் முன்பு இன்று (19.6.2020) இந்திய மாணவர் சங்கம் சார்பில்... மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

17 / 77

ராகுல் காந்தியின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு... இன்று (19.6.2020) மதுரை - தல்லாகுளம் நேரு சிலை முன்பு காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன்... பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

18 / 77

இன்று (19.6.2020) முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துப்பட்டுள்ளதைத் தொடர்ந்து... வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படும் சென்னை - திருவான்மியூர் அருகில் டைடல் பார்க் அமைந்துள்ள ராஜிவ் காந்தி சாலை. படங்கள்: எல்.சீனிவாசன்

19 / 77
20 / 77
21 / 77
22 / 77

’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ்.... செயல்படும் மதுரை பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை... இன்று (19.6.2020) கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு செய்தார். உடன் அரசு அதிகாரிகள். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

23 / 77

இன்று (19.6.2020) முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துப்பட்டுள்ளதைத் தொடர்ந்து... வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படும் சென்னை - சைதாப்பேட்டை பனகல் மாளிகை அமைந்துள்ள சாலைப் பகுதி. படங்கள்: எல்.சீனிவாசன்

24 / 77
25 / 77

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்... இரண்டு மாவட்ட எல்லையான - பிள்ளையார் குப்பம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அத்தியாவாசிய தேவையின்றி மாவட்ட எல்லைக்குள் இ-பாஸ் அனுமதி இல்லாமல் நுழையும் வெளியூர் வாகனங்களைக் கண்காணிக்க... போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று (19.6.2020) தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. படங்கள்: வி.எம்.மணிநாதன்

26 / 77
27 / 77

வேலூர் மத்திய சிறை ஊழியர்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து... இன்று (19.6.2020) வேலூரில் - சிறைத் துறை டிஐஜி அலுவலகம் மூடப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்.

28 / 77

இன்று (19.6.2020) முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து.. ஊரடங்கு விதி முறைகளை மீறுவோர் மீது - கடும் நடவடிக்கை எடுக்க... சென்னை - அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை சந்திப்பில் ’ட்ரோன்’ மூலம்சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று ஆய்வு மேற்கொண்டார். படங்கள் : எல்.சீனிவாசன்

29 / 77
30 / 77
31 / 77
32 / 77

இன்று (19.6.2020) முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து... இன்று பகலில் - சென்னை - அண்ணா சாலையில் அத்தியாவசியமின்றி உட்புகுந்த வாகனங்களை போலீஸார் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தினர்.. படங்கள்: எல்.சீனிவாசன்

33 / 77
34 / 77
35 / 77
36 / 77
37 / 77

இன்று (19.6.2020) முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து... இன்று வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்ட பல்லாவரம் - ரேடியல் சாலை. படங்கள்: எம்.முத்துகணேஷ்

38 / 77
39 / 77
40 / 77
41 / 77

இன்று (19.6.2020) முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து... வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்ட சென்னை - குரோம்பேட்டை - ஜி.எஸ்.டி சாலை.. படம்: எம்.முத்துகணேஷ்

42 / 77

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் பொருத்தப்பட்டுள்ள இயந்திரத்திலன் மூலம் கிருமிநாசினியைக் கொண்டு... கைகளை சுத்தம் செய்த புதுவை முதல்வர் நாராயணசாமி. படம்: எம்.சாம்ராஜ்

43 / 77

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - புதுச்சேரி சட்டப் பேரவைக்குள் பொதுமக்கள் வருவதற்கு புதுவை அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் - இன்று (19.6.2020) அவசர தேவையையொட்டி சட்டப் பேரவைக்குள் வருபவர்கள் உடல் வெப்ப சோதனை செய்யப்பட்ட பிறகே... உள்ளே அனுமதிக்கப்பட்டனர். படம்: எம்.சாம்ராஜ்

44 / 77
45 / 77
46 / 77

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் உள்ள பாதி கடைகளை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக... நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கலந்துகொண்ட வியாபாரிகள். படம்: எம்.சாம்ராஜ்

47 / 77

முழு ஊரடங்கையொட்டி இன்று (19.6.2020) சென்னை - பெருங்களத்தூர் பகுதியில் போலீஸார் தொடர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் நீண்ட தூரம் வரையில் ஏராளமான - வாகனங்கள் அணிவகுத்து நின்றன. படங்கள்: எம்.முத்துகணேஷ்

48 / 77
49 / 77
50 / 77
51 / 77
52 / 77
53 / 77

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக... மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த - மாநகராட்சி அதிகாரிகள் கோவை பூ மார்க்கெட் பகுதியில் தகடுகள் வைத்து மறைத்தனர். படம்: ஜெ.மனோகரன்

54 / 77
55 / 77
56 / 77

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரவி ராமநாதன் என்பவர் வீட்டில் இன்று (19.6.2020) ஆண்டுக்கு ஒரு முறையே பூக்கும் நிஷாகாந்தி பூ... பூத்துள்ளது. படம்: ஜெ.மனோகரன்

57 / 77
58 / 77
59 / 77
60 / 77

இந்திய எல்லையில் அத்து மீறி நடக்கும் சீன ராணுவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து... இன்று (19.6.2020) கோவை - சிவானந்தா காலனியில் - சீன நாட்டு கொடியை எரித்தும்... சீன நாட்டு செல்போன்களை உடைத்தும் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஜெ.மனோகரன்

61 / 77
62 / 77
63 / 77

கோடை வெப்ப சூட்டை தணிக்க... கோவை கவுண்டம்பாளையம் - மேட்டுப்பாளையம் சாலையில்... மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவரும்... மண்ணால் செய்யபட்ட தண்ணீர் குடுவைகள் மற்றும் மண்ணாலான அலங்காரப் பொருட்கள். படங்கள்: ஜெ.மனோகரன்

64 / 77
65 / 77
66 / 77
67 / 77
68 / 77

மின்திருத்த அவசரச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி...திண்டுக்கல்லில் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி. படம்: பு.க.பிரவீன்

69 / 77

சேலம் - மாவட்டத்தில் கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறியும்... நடமாடும் வாகனத்தை சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் ராமன் இன்று (19.6.2020) தொடங்கி வைத்தார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் - கிருமி நாசினி மருந்து தெளிக்கும் நவீன இயந்திரங்கள் கூடுதலாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. படங்கள்: எஸ் குருபிரசாத்.

70 / 77
71 / 77
72 / 77

இன்று (19.6.2020) முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து... வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்ட சென்னை - பாரிமுனையில் உள்ள நான்குமுனைச் சாலை. படங்கள்: எல்.சீனிவாசன்

73 / 77
74 / 77

இன்று (19.6.2020) முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து... வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படும் சென்னை - ராயபுரம் எம்.சிசாலை. படங்கள்: எல்.சீனிவாசன்

75 / 77
76 / 77

இன்று (19.6.2020) முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து...இன்று - வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படும் சென்னை - ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை அமைந்துள்ள வாலாஜா சாலை. படம்: எல்.சீனிவாசன்

77 / 77

இன்று (19.6.2020) முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துப்பட்டுள்ளதைத் தொடர்ந்து... iன்று வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படும் சென்னை - மாதவரம் பகுதி... கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலை. படம்: எல்.சீனிவாசன்

Recently Added

More From This Category

x