Short news

பெரம்பலூர் அருகே சொத்து கேட்டு தந்தையை தாக்கிய மகன் கைது

சொத்து தொடர்பாக தந்தை குழந்தைவேலை மகன் சந்தோஷ் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்.18-ம் தேதி வீட்டின் படுக்கையறையில் குழந்தைவேல் இறந்துவிட உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில், சந்தோஷ் தந்தை குழந்தைவேலைத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வைரலானது. இதையடுத்து, 5 பிரிவுகளின் கீழ் கை.களத்தூர் போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து, சந்தோஷை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

x