Short news

‘‘புதுச்சேரியில் நாய்க்கு புலி வேஷம்’’ - மர்ம நபர்களை தேடும் போலீஸார்

மயிலாடுதுறையில் சிலநாட்களுக்கு முன் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் புலி உலாவுவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.

ஆனால், சில மர்ம நபர்கள் தெரு நாயின் உடலில் புலியைப் போலவே அழகான கோடுகளை வரைந்து, வண்ணமிட்டு உலவவிட்டது தெரியவந்தது. புலி வேஷம் போடப்பட்ட நாய், கடந்த 2 நாட்களாக குறிஞ்சி நகர் பகுதியில் உலா வருகிறது.

x