Short news

‘‘ஒரு செங்கல்கூட கர்நாடகம் வைக்க முடியாது’’ - துரைமுருகன்

‘‘தமிழ்நாட்டின் இசைவை பெறாமல் மேகேதாட்டுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகாவால் எடுத்து வைக்க முடியாது என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடகாவில் இந்த விஷயத்தில் அரசியல் செய்கிறார்கள். பாஜக, காங்கிரஸ் என யார் வந்தாலும் இதைத்தான் செய்கிறார்கள். அச்சப்படத் தேவையில்லை. காரணம் தமிழ்நாட்டின் இசைவின்றி அனுமதியை பெற முடியாது.’’ என்று சட்டப்பேரவையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

x