Published : 03 Sep 2017 11:23 AM
Last Updated : 03 Sep 2017 11:23 AM
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டரை நியமிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
இந்தியாவில் அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ரிச்சர்டு வர்மாவின் பதவிக் காலம் கடந்த ஜனவரி 20-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு ஏழு மாதங்களாகியும் புதிய தூதர் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில் அமெரிக்க அதிபரின் வெளிநாட்டு பொருளாதார விவகாரத் துறை மூத்த அதிகாரியாக பணியாற்றி வரும் கென்னத் ஜஸ்டரை (62) இந்தியாவுக்கான தூதராக நியமிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அதிபர் மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியா, அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக கென்னத் ஜஸ்டர் முக்கிய பங்காற்றினார். கடந்த 35 ஆண்டுகளாக அமெரிக்க அரசு நிர்வாகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவடைந்து வரும் நிலையில் இந்தியாவுக்கு நெருக்கமான ஒருவர் தூதராக நியமிக்கப்பட உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT