Published : 01 Sep 2017 11:18 AM
Last Updated : 01 Sep 2017 11:18 AM

ஹூஸ்டன் அருகே ரசாயன ஆலையில் வெடிவிபத்து

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு அருகில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

டெக்ஸாஸ் மாகாணத்தில் பெருமழை பெய்ததால் ஹூஸ்டன் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். வெள்ளத்தால் இந்திய மாணவர் உட்பட 30 பேர் இறந்தனர்.

இதனிடையே, ஹூஸ்டன் நகருக்கு அருகே செயல்படும் ரசாயன ஆலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் இல்லை. புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 9 பேர் முன்னெச்சரிக்கையாக சிகிச்சை பெற்றனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x