Last Updated : 26 Sep, 2017 06:05 PM

 

Published : 26 Sep 2017 06:05 PM
Last Updated : 26 Sep 2017 06:05 PM

இஸ்ரேலில் பாலஸ்தீன நபர் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

இஸ்ரேலில் பாலஸ்தீன நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 இஸ்ரேலியர்கள் பலியாகினர்.

இதுகுறித்து இஸ்ரேல் போலீஸார் கூறும்போது, ”இஸ்ரேல் தலைநகர் ஜெருசேலம் அருகில் பாலஸ்தீன நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆபத்தான தாக்குதல்களில் இதுவும் ஒன்று. தாக்குதல் நடத்திய நபரும் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டுமுதல் பாலஸ்தீனர்களால் 48 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்று இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் சந்தேகத்தின் அடிப்படையில் பாலஸ்தீனர்கள் 255 பேர் கொல்லப்பட்டுள்ள்னர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே அமைதி ஏற்பட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேச்சு வார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x