Published : 09 Dec 2016 09:01 AM
Last Updated : 09 Dec 2016 09:01 AM

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத் தில் நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

சீனாவின் ஜின்ஜியாங் மாகா ணத்தில் உய்குர் இன முஸ்லிம் கள் பெரும்பான்மையாக வசிக் கின்றனர். அந்த மாகாணத்தின் ஹுடாபி பகுதியில் நேற்று அதி காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.2 ஆகப் பதிவானது.

அப்பகுதி கட்டிடங்களில் விரிசல் கள் ஏற்பட்டன. வீடுகளில் அதிர்வு கள் உணரப்பட்டன. இதனால் பொதுமக்கள் வீடுகள், அலுவல கங்களை விட்டு வெளியேறி சாலை கள், மைதானங்களில் குவிந்தனர்.

ரயில் சேவைகள் தற்காலிக மாக நிறுத்தப்பட்டன. தண்ட வாளங்களின் உறுதித்தன்மை சரிபார்க்கப்பட்ட பிறகு மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x