Published : 20 Dec 2016 09:23 AM
Last Updated : 20 Dec 2016 09:23 AM
நடப்பாண்டில் உலகம் முழுவதும் 57 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பத்திரிகை சுதந்திர குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகின் பல்வேறு பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அங்கு பன்னாட்டு நிருபர்கள் செய்தி சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் 57 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மிக அதிகபட்சமாக சிரியாவில் 19 பேர் உயிர்பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் 10 பேரும், மெக்ஸிகோவில் 9 பேரும், இராக்கில் 5 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சிரியா, இராக், லிபியா, ஏமன், ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டில் போர் முனையில் செய்தி சேகரித்த 67 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT