Published : 30 Oct 2016 01:05 PM
Last Updated : 30 Oct 2016 01:05 PM
தெற்கு மற்றும் மத்திய இத்தாலியை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவுகோலில் இது 6.6 என்று பதிவாகியுள்ளது.
ஞாயிறு காலை 7.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி தெருவுக்கு வந்தனர். நோர்சியாவில் கன்னியாஸ்த்ரீகள் சர்ச்சிலிருந்து வெளியே வந்தனர்.
மணிக்கூண்டு ஒன்று ஆடியபடி கீழே விழுந்து விடும் அபாயத்தை ஏற்படுத்தியதாக நேரில் பார்த்தவர்கள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
ரோம் நகருக்கு 132 கிமீ வடகிழக்கேயும் பெருகியாவுக்கு 67 கிமீ கிழக்கிலும் இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்குக் கீழ் 10கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும் இதுவரை காயங்கள், உயிரிழப்புகள் பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT