Published : 15 Oct 2016 07:14 PM
Last Updated : 15 Oct 2016 07:14 PM
சிரியாவில் வான்வழித் தாக்குதலில் 15 பேர் பலியாகினர். இந்த வான்வழித் தாக்குதலை அமெரிக்கப் படைகள் நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக சின்குவா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், சிரியாவில் வெள்ளிக்கிழமை அல்-ரஃக பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 15 பேர் பலியாகினர். இத்தாக்குதலை அமெரிக்கப் படைகள் நிகழ்த்தியதாக நம்பப்படுகிறது எனக் கூறப்படுகிறது.
சிரியாவில் அமெரிக்கப் படைகள் நடத்தும் முதல் வான்வழித் தாக்குதல் இதுவல்ல. இதற்கு முன்னரே ஐ.எஸ்.கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் பகுதிகள் பலவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
சிரியாவில் போர் நிறுத்தத்தை அமல் செய்ய அமெரிக்காவும் ரஷ்யாவும் புதிய உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள நிலையில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து வான்வழித் தாக்குதலை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT