Published : 08 May 2016 12:56 PM
Last Updated : 08 May 2016 12:56 PM
வங்கதேசத்தில் மூடநம்பிக்கை களுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் சமூக சீர்திருத்தவாதிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 7 மாதங்களில் இதுவரை 14 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரலில் மட்டும் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் வங்கதேசத் தின் ராஜ்ஷா பகுதி சமூக சீர்திருத் தவாதி என்று அழைக்கப்பட்ட முஸ்லிம் மதத் தலைவர் ஷாதினுல்லா நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்களால் கழுத் தறுத்து கொலை செய்யப்பட்டார்.
வங்கதேசத்தில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு ஆழமாக காலூன்றி வருகிறது. இதுவரை கொல்லப்பட்ட 14 பேரையும் நாங்கள்தான் கொலை செய்தோம் என்று அந்த அமைப்பு பகிரங்கமாக அறிவித்தது. ஷாதினுல்லா கொலையிலும் ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு தொடர்பிருக்கும் என்று சந்தேகிக் கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT