Published : 15 Mar 2016 11:01 AM
Last Updated : 15 Mar 2016 11:01 AM
இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது அவரது குடும்பத்தின் சார்பில் 2011 பிப்ரவரியில் கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட் வொர்க் (சி.எஸ்.என்.) தொலைக் காட்சி தொடங்கப்பட்டது. வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முறை கேடுகளில் சி.எஸ்.என். ஈடுபட்ட தாக குற்றம் சாட்டப்பட்டன.
இதுதொடர்பாக ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச உட்பட 4 பேர் கடந்த ஜனவரி இறுதியில் கைது செய்யப்பட்டனர். அவர் களின் தரப்பில் கொழும்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், யோஷித ராஜபக்ச உள்ளிட்ட 4 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்தது. எனினும் நீதிமன்றத்தில் அனுமதி இன்றி 4 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை யின்போது மஹிந்த ராஜபக்ச நீதிமன்றத்தில் இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT