Published : 21 Mar 2016 10:42 AM
Last Updated : 21 Mar 2016 10:42 AM
எகிப்தில் சோதனைச் சாவடி மீது ஐஎஸ் தீவிரவாதிகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 13 போலீஸார் உயிரிழந்தனர்.
எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல்-அரிஷ் என்ற இடத்தில் பாதுகாப்பு சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன் இந்த சோதனைச் சாவடி மீது தீவிரவாதி கள் திடீரென குண்டுவீசி தாக்குதல் நடத்தினர். இதில் 13 போலீஸார் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப் பேற்றுள்ளது.
அப்பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தினங்களுக்கு முன் ரஃபா நகரில் ராணுவ சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் குண்டுவீசி தாக்கு தல் நடத்தியதில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த சூழலில் மீண்டும் அதே பாணியில் போலீஸ் சோத னைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது எகிப்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT