Published : 09 Mar 2016 10:48 AM
Last Updated : 09 Mar 2016 10:48 AM
கிரீஸ் நாட்டில் முகாமிட்டுள்ள அகதிகளை மீண்டும் துருக்கிக்கு அனுப்ப ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. இதற்கு துருக்கி அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப் போரால் பாதிக் கப்பட்டுள்ள சிரியா, ஈராக்கில் இருந்து கடல்மார்க்கமாக துருக்கி, கிரீஸ் நாடுகளில் கரை யேறும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பெரும்பாலான அகதிகள் துருக்கிக்கு சென்று அங்கிருந்து கிரீஸ், மாசிடோனியா வழியாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில் அகதிகள் பிரச் சினை தொடர்பாக பிரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று முன்தினம் ஆலோ சனை நடைபெற்றது. இதில் கிரீஸில் முகாமிட்டுள்ள அகதிகளை துருக்கிக்கு அழைத்துக் கொள்ள அந்த நாடு சம்மதம் தெரிவித்தது. இதற்காக ஐரோப்பிய யூனியன் தரப்பில் துருக்கிக்கு பெரும் தொகை நிவாரண உதவியாக வழங்கப்படுகிறது.
இதேபோல வேறுசில ஐரோப் பிய நாடுகளில் வசிக்கும் அகதி களையும் துருக்கி அகதிகள் முகாமுக்கு அனுப்ப சம்பந்தப்பட்ட நாடுகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்மூலம் அகதிகளின் வருகை குறையும் என்று ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு செல்ல முயன்ற நூற்றுக் கணக்கான அகதிகள் கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT