Published : 20 Feb 2016 11:15 AM
Last Updated : 20 Feb 2016 11:15 AM
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அடுத்த வாரம் வாஷிங்டனில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் மார்ச் 31, ஏப்ரல் 1 தேதிகளில் அணுசக்தி பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங் கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா விடுத்துள்ள அழைப்பை இந்தியப் பிரதமர் மோடியும் பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் மோடியும் நவாஸும் சந்தித்துப் பேச வாய்ப் புள்ளதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த அதிகாரி கூறும்போது, “வாய்ப்புகள் வலுவாக உள்ளன. ஆனால் இந்திய பாகிஸ்தான் பேச்சு வார்த்தையின் வரலாறு உங்களுக் குத் தெரியும். எனவே அது நிகழும் வரை நீங்கள் உறுதியாக நம்ப முடியாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT